NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு

    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    Sep 02, 2023
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவன பெயர் பலகையினை தமிழில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் இந்த உத்தரவினை மீறும் நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதன்படி இந்த மனு மீதான வழக்கின் விசாரணை நேற்று(செப்.,1) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அப்போது தமிழக அரசு சார்பிலான பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    உத்தரவு 

    அக்டோபர் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு 

    இது குறித்து தமிழக அரசு கூறியதாவது, தற்போதைய நிலவரப்படி தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு ரூ.50 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இனி இந்த அபராதத்தொகை உயர்த்தப்படும். ரூ.50ஆக உள்ள அபராத தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? என்பது குறித்த விரிவான அறிக்கையினை தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,

    இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்கும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமநாதபுரம்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது மாவட்ட செய்திகள்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை

    தமிழ்நாடு

    நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு  இந்தியா
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே  மு.க ஸ்டாலின்

    தமிழக அரசு

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை  ரெய்டு
    புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? திமுக
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்  டாஸ்மாக்
    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025