NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 
    இந்தியா

    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    September 02, 2023 | 12:15 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு

    தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவன பெயர் பலகையினை தமிழில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவினை மீறும் நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனு மீதான வழக்கின் விசாரணை நேற்று(செப்.,1) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அப்போது தமிழக அரசு சார்பிலான பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    அக்டோபர் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு 

    இது குறித்து தமிழக அரசு கூறியதாவது, தற்போதைய நிலவரப்படி தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு ரூ.50 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்த அபராதத்தொகை உயர்த்தப்படும். ரூ.50ஆக உள்ள அபராத தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? என்பது குறித்த விரிவான அறிக்கையினை தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்கும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராமநாதபுரம்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    ராமநாதபுரம்

    கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சென்னை
    ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை ராமேஸ்வரம்
    சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் - மருத்துவமனை அறிக்கை வெளியீடு  அரசு மருத்துவமனை
    சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம்  சென்னை

    தமிழ்நாடு

    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் ஆதித்யா L1
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை தற்கொலை
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் கோயம்புத்தூர்
    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு வாகனம்

    தமிழக அரசு

    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு  பண்டிகை
    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார்  தமிழகம்
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023