NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள் 
    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்

    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள் 

    எழுதியவர் Nivetha P
    Jun 27, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து கைதான குற்றவாளிகள் பலர் சிறையில் தங்கள் தண்டனை காலத்தினை அனுபவிக்கிறார்கள்.

    இவர்கள் சிறையினைவிட்டு வெளியில் வரும்பொழுது நல்ல மனிதர்களாக மனம் திருந்தி வரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

    அதில் ஒன்று, சிறையிலுள்ள கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்வதாகும்.

    சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களில் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு அறுவடைச்செய்து, அதனை சிறையிலுள்ள செக்கில் எண்ணெய்யாக தயாரிப்பது போன்ற பல பணிகளை கைதிகள் செய்துவருகிறார்கள்.

    இவ்வாறு கைதிகள் உற்பத்திச்செய்யும் பொருட்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது.

    அதன்படி, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி மேற்பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனைச்செய்ய சூப்பர் மார்க்கெட்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

    கைதிகள் 

    சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பத்தார் கையில் கொடுக்கப்படும் சம்பள பணம் 

    அந்த வகையில், எழும்பூர் பகுதியிலுள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் துவங்கியுள்ள சூப்பர் மார்க்கெட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதுப்போன்று மதுரையில் துவங்கப்பட்டுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தினமும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்திற்கு பொருட்கள் விற்பனையாகிறது என்று கூறப்படுகிறது.

    இதன்மூலம் பொருட்களை தயார் செய்யும் சிறைக்கைதிகளும் மாதம் ரூ.10ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.

    சிறையிலுள்ள கைதிகளுக்கு சாப்பாடு செலவுக்கூட இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு இந்த வருமானம் அப்படியே மிச்சமாகிறது.

    மேலும் இந்த பணம் நேரடியாக கைதிகள் கையில் கொடுக்கப்படாது.

    இதற்கென சிறையில் ஒரு கணக்கர் பணியாற்றி வருகிறார்.

    அவர் இந்த சம்பள பணத்தினை பத்திரப்படுத்தி கைதிகளின் குடும்பத்தினர் வரும் பொழுது அவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்  தமிழக அரசு
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை  உச்ச நீதிமன்றம்
    9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'திராவிட மொழி குடும்பம்' என்னும் பாடம் சேர்ப்பு - ஐ.லியோனி பேட்டி இந்தியா
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்

    தமிழக அரசு

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்  திருநெல்வேலி
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  திமுக
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025