NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம் 

    6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆறு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் மற்றும் மூன்று பேரை இடம் மாற்றியுள்ளார் என்று ராஷ்டிரபதி பவனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த அலுவலகங்களை ஏற்றுக்கொண்டவுடன் இடமாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.

    புதிய நியமனங்கள் பின்வருமாறு:

    அனுசுயா உய்கேக்குப் பதிலாக, லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாமின் ஆளுநராகவும், கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநராகவும் பணியாற்றுவார்.

    பன்வாரிலால் புரோஹித்துக்குப் பதிலாக, அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் ஆளுநராக பதவியேற்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார்.

    மகாராஷ்டிராவில் ரமேஷ் பாயிஸுக்கு பதிலாக சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.

    இந்தியா 

    புதிய ஆளுநர்கள் நியமன விவரங்கள் 

    ராதாகிருஷ்ணன் இதற்கு முன்பு ஜார்க்கண்ட் ஆளுநராகவும், தெலுங்கானா மாநிலத்தின் கூடுதல் பொறுப்பாளராகவும் இருந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக திரிபுராவின் முன்னாள் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மாவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே கைலாசநாதனும் பதவியேற்க உள்ளனர்.

    அசாமைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினரான ராமன் டேகா சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தானில், கல்ராஜ் மிஸ்ராவுக்குப் பதிலாக, ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மைசூரைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினரான சி.எச்.விஜயசங்கர் மேகாலயா ஆளுநராக பணியாற்ற உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    இந்தியா

    0001 எனும் ஃபேன்ஸி கார் நம்பர் 23 லட்சத்துக்கு விற்பனை: வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன? போக்குவரத்து
    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது  மும்பை
    'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி  ரஷ்யா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள்  ஜம்மு காஷ்மீர்

    திரௌபதி முர்மு

    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025