NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது

    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் படி, இந்தாண்டு கலை கலாச்சார பிரிவில் 4 பேருக்கும், துணிச்சல், சமூக சேவை பிரிவில் தலா 1வருக்கும், புத்தாக்கம் பிரிவில் 2 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும் என இந்தியா முழுவதும் உள்ள 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    இதனையடுத்து இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று(ஜன.,23) நடந்தது.

    மோடியுடன் கலந்துரையாடல்

    'நாட்டின் நலனுக்காக குழந்தைகள் சிந்திக்க வேண்டும்' - இந்திய ஜனாதிபதி

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருதுகளை வழங்கினார்.

    அப்போது பேசிய திரவுபதி முர்மு அவர்கள், குழந்தைகள் தான் இந்நாட்டின் மிக பெரிய சொத்து என்றும், நாட்டின் நலன் குறித்து குழந்தைகள் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும், குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் நாடு மற்றும் சமூக நலனுக்காகவும், அவர்களது எதிர்கால நலனுக்காகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, இந்த விருதுகளை பெற்ற குழந்தைகள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்வார்கள் என்றும் அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று கலந்துரையாடுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    இளைஞர்களை கவரும் ப்ரீமியம் கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச்! தொழில்நுட்பம்
    வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண் இந்தியா
    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு உலக செய்திகள்
    15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு வாகனம்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025