NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
    இந்தியா

    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது

    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023, 06:24 pm 1 நிமிட வாசிப்பு
    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
    பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது

    ஒவ்வொரு ஆண்டும் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்தாண்டு கலை கலாச்சார பிரிவில் 4 பேருக்கும், துணிச்சல், சமூக சேவை பிரிவில் தலா 1வருக்கும், புத்தாக்கம் பிரிவில் 2 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும் என இந்தியா முழுவதும் உள்ள 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று(ஜன.,23) நடந்தது.

    'நாட்டின் நலனுக்காக குழந்தைகள் சிந்திக்க வேண்டும்' - இந்திய ஜனாதிபதி

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய திரவுபதி முர்மு அவர்கள், குழந்தைகள் தான் இந்நாட்டின் மிக பெரிய சொத்து என்றும், நாட்டின் நலன் குறித்து குழந்தைகள் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் நாடு மற்றும் சமூக நலனுக்காகவும், அவர்களது எதிர்கால நலனுக்காகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, இந்த விருதுகளை பெற்ற குழந்தைகள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்வார்கள் என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று கலந்துரையாடுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு

    மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023