NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள்
    பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் இயக்கம்

    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள்

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022
    11:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஜனவரி மாதம் 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகைக்கு சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் தமிழக அரசால் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, தென்மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்தது.

    அதன்படி, தாம்பரம்-நெல்லை, நெல்லை-சென்னை எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில், நாகர்கோவில்-தாம்பரம், திருவனந்தபுரம் கொச்சுவேலி-தாம்பரம் என மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    11ம் தேதி 'தட்கல்' முறை முன்பதிவு அறிவிப்பு

    காலை 8 மணிக்கு துவங்கிய முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது

    இதற்கான முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய பொதுமக்கள் பலர் ரயில் நிலையங்களில் வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே பயணச்சீட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதனை தொடர்ந்து, இன்று முன்பதிவு செய்ய முடியாதவர்கள் வரும் 11ம் தேதி 'தட்கல்' முறையில் காலை 10 மணிக்கு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025