NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்

    எழுதியவர் Nivetha P
    Feb 18, 2023
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.

    பின்னர் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என்ற அறிவிப்பினை தெரிவித்தனர்.

    இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.'வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதனையடுத்து இன்று(பிப்.,18) தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பா.ம.க. நிறுவனர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

    இந்த சந்திப்பானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    கூட்டணி சம்பந்தமான சந்திப்பாக இது இருக்கலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடவேண்டியவை.

    வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு

    தமிழகத்தில் போதை பொருள் தடுப்பதை குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

    இதனை தொடர்ந்து சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் கூறியதாவது, முதல் ஸ்டாலின் உடனான இந்த சந்திப்பு நிச்சயம் அரசியல் குறித்தது இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக பேசியதாகவும், நீர் மேலாண்மை, அரியலூர் சோழர் கால பாசன இடத்தினை நிறைவேற்றுவது குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார்.

    மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசியதாகவும் கூறினார்.

    வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதாகவும்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    சென்னை

    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் ரயில்கள்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் மெரினா கடற்கரை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் விமானம்

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025