Loading...
"ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி!" ஹர் கர் திரங்கா இயக்கத்தில் இணைய பிரதமர் மோடி வேண்டுகோள்
நாட்டு மக்கள் அனைவரும் ஹர் கர் திரங்கா இயக்கத்தில் இணைய பிரதமர் மோடி வேண்டுகோள்

"ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி!" ஹர் கர் திரங்கா இயக்கத்தில் இணைய பிரதமர் மோடி வேண்டுகோள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 09, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை அடைவதற்கான நமது கூட்டு உறுதியை இந்தப் பிரசாரத்தின் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், தேசியக் கொடியுடன் தங்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

150வது ஆண்டு

வந்தே மாதரம் 150வது ஆண்டு சிறப்பு அம்சம்

இந்த ஆண்டு நடைபெறும் ஹர் கர் திரங்கா பிரசாரம், நமது தேசியப் பாடலான வந்தே மாதரம் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடையும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்துடன் இணைந்து வருகிறது.

150 ஆண்டுகளாக தேசபக்தியை ஊட்டி வளர்த்த வந்தே மாதரத்தின் தியாக சிந்தனையை கௌரவிக்கும் வகையில், வந்தே மாதரத்தின் உணர்விற்கு திரங்கா வணக்கம் என்ற சிறப்பு மையக்கருத்துடன் நடப்பாண்டு கொண்டாட்டங்கள் மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் ஊராட்சிகள் தோறும் மிகப் பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சிகள்

நாடு தழுவிய அளவில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள்

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் திரங்கா யாத்திரைகள், இருசக்கர வாகனப் பேரணிகள், திரங்கா இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டாக வந்தே மாதரம் பாடும் நிகழ்வுகள் உள்ளிட்டப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, அதனுடன் எடுக்கும் செஃல்பி படங்களை harghartiranga.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இயக்கம்

2022ல் தொடங்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சி

கடந்த 2022 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா (Azadi Ka Amrit Mahotsav) கொண்டாட்டங்களின் போது பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கம், குடிமக்களிடையே தேசியக்கொடியுடன் தனிப்பட்ட பிணைப்பை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

தியாகிகளின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே சுதந்திர தினத் தொடக்க விழா பேரணிகளும், திரங்கா யாத்திரைகளும் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT