Page Loader
பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை: ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார் எனத்தகவல்
பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை

பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை: ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார் எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2025
08:08 am

செய்தி முன்னோட்டம்

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜூலை 27ம் தேதி நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த கோவிலைத் திருவாளர் மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டியமைத்துள்ளார். அவரது பிறந்த நாளான ஆடித்திருவாதிரை நாளை மாநில அரசு 2021ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் விழாவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

விவரங்கள்

தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் போலீசுப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்டோர் விழா நடைபெற உள்ள கோவிலில் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் வசதிகள் குறித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர். விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.