Page Loader
தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மாநாட்டு மையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Sep 17, 2023
01:14 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) டெல்லி துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின்(ஐஐசிசி) முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இந்த மாநாட்டு மையத்திற்கு யஷோபூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. யஷோபூமியை பிரதமர் மோடி திறந்து வைத்த பிறகு, மாநாட்டு மையத்தில் 'பாரத் மாதா கி ஜெய்' கோஷங்கள் ஒலித்தன. மாநாட்டு மையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அந்த பயணத்தின் போது, அவர் மெட்ரோ ரயில் பயணிகளுடன் உரையாடினார். டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையில் ஒரு புதிய மெட்ரோ வழித்தடமும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

டைஜின்வ்க்க்

உலகின் மிகப்பெரிய MICE  கட்டிடங்களில் ஒன்றான யஷோபூமி

யஷோபூமி மாநாட்டு மையம், 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான திட்டப் பரப்பளவும், 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான மொத்தப் பரப்பளவும் கொண்ட உலகின் மிகப்பெரிய MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) கட்டிடங்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. 73,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மாநாட்டு மையம், 15 மாநாட்டு அறைகளைக் கொண்டுள்ளது. இதில் பிரதான அரங்கம், ஒரு பால்ரூம் மற்றும் 11,000 பிரதிநிதிகளை தங்க வைக்கும் அளவிலான 13 கூட்ட அறைகள் உள்ளன. இதன் பிரதான ஆடிட்டோரியத்தில் 6,000 விருந்தினர்கள் அமரக்கூடிய வசதிகள் உள்ளன.