NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

    எழுதியவர் Nivetha P
    Aug 04, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.

    கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு பின்னர் வரும் ஆகஸ்ட் 22ம்தேதி துவங்கி 24ம்தேதி வரை இந்த பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது.

    இதனிடையே நேற்று(ஆகஸ்ட்.,3)பிரதமர் மோடியை தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது இந்தாண்டில் இருதரப்பு ராஜதந்திர-தூதரக உறவுகள் துவங்கி 30ம்ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அத்துடன் நடக்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு மோடியை அழைத்த ராமசோபா, அதற்காக மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

    மாநாடு 

    பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என தகவல் 

    இதனையடுத்து அவரின் அழைப்பினை ஏற்ற பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளாராம்.

    அதனை தொடர்ந்து இந்தியாவில் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா எடுக்கும் முயற்சிகளை பாராட்டிய தென் ஆப்பிரிக்கா அதிபர், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக மோடியிடம் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2020ம் ஆண்டு முதல் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த பிரிக்ஸ் மாநாடு நடப்பாண்டில் நேரடியாக நடைபெறவுள்ளது.

    இதில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படுவதோடு, பிரிக்ஸ் நாடுகளின் மத்தியிலுள்ள ஒத்துழைப்பு குறித்தும் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி  தெலுங்கானா
    மதம் மாறி பாகிஸ்தான் காதலரை மணந்து கொண்டார் இந்திய பெண் அஞ்சு  பாகிஸ்தான்
    யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மீது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? யூடியூப்
    கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? பாகிஸ்தான்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 95 கொரோனா பாதிப்பு இந்தியா

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  தமிழ்நாடு
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு மு.க ஸ்டாலின்
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025