NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை

    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரியில் இ-சலான் கருவி மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    புதுச்சேரியில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

    அதோடு விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இதனால் அந்த மாநிலத்தில் விபத்தினை குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி தற்போது விதிகளை மீறுபவர்களுக்கு கையால் எழுதி தந்தோ, கையடக்க கருவி மூலமாகவோ சலான் வழங்கப்படுவதும், ஸ்பாட் பைன் வசூலிப்பதும் நடைமுறையில் உள்ளது.

    இதில் காலதாமதம், கையில் பணம் இல்லாதது போன்ற காரணங்களால் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

    விதிமீறுபவர்களின் முழுவிவரங்களை சேகரிக்க முடியாத நிலையும் உள்ளது.

    இதற்கான தீர்வாகதான் புதுச்சேரியில் 'இ-சலான்' கருவி மூலம் 'ஸ்பாட்பைன்' வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    போக்குவரத்து துறை

    35 கருவிகள் போக்குவரத்து போலீசாரிடமும், 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

    இந்த முறையில் அபராதம் வசூலிக்க புதுச்சேரி போக்குவரத்து துறை 50 'இ-சலான்' அதிநவீன கருவிகளை வாங்கியுள்ளது.

    இதில் 35 கருவிகள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

    மீதமுள்ள 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்படவுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இ-சலான் கருவியானது அனைத்து வாகன உரிமங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய சாரதி ஆப் மற்றும் அனைத்து வாகனங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய 'வாஹன் ஆப்' ஆகியவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும்.

    இதில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண் அல்லது ஓட்டுநர் உரிம எண் பதிவு செய்தால் அவருடைய அனைத்து விவரங்களும் இதில் பதிவாகிவிடும்.

    இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் முன்னராக விதி மீறலில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவரங்களை காணலாம் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025