NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு 
    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு

    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 21, 2023
    07:40 pm

    செய்தி முன்னோட்டம்

    2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வைத்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.

    இலங்கை நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நேர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அப்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

    அதனை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாட்டின் அதிபராக பதவியேற்றார்.

    அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் முடிந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

    இந்நிலையில் பிரதமர் மோடியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ரணில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    பின்னர் பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    மோடி 

    கப்பல் மற்றும் படகு போக்குவரத்து சேவைகளில் கவனம் செலுத்திவரும் இலங்கை 

    அப்போது அவர், இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்போவதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

    அதன்படி கப்பல் சேவையானது தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனைத்தொடர்ந்து, இந்தியா-இலங்கை இடையேயான இந்த கப்பல் சேவை துவங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

    ஏற்கனவே சென்னையிலிருந்து இலங்கைக்கு எம்எஸ்.எம்பரெஸ் என்னும் சொகுசுக்கப்பல் 3 துறைமுகங்கள் இடையே இயங்கிவருகிறது என்பதனையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த சொகுசுக்கப்பலால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையினை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா மற்றும் வருவாயினை மனதில்கொண்டு இலங்கை அரசு தற்போது கப்பல் மற்றும் படகு போக்குவரத்து சேவைகளில் கவனம் செலுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரணில் விக்கிரமசிங்க
    பிரதமர் மோடி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    பறக்கும் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வைரல் வீடியோ  சந்திரயான் 3
    நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி  ஏர் இந்தியா

    ரணில் விக்கிரமசிங்க

    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை  இந்தியா

    பிரதமர் மோடி

    இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களா: சர்ச்சையான கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இந்தியா
    டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு  டெல்லி
    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மேலும் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை  மு.க ஸ்டாலின்
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்  ராஜமௌலி
    அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்  அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025