NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 
    பிரதமர் மோடியும் ட்விட்டரில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

    ட்விட்டரில் ராஜீவ் காந்தியின் பல்வேறு நினைவுகளை ஒரு வீடியோவாக பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி இந்தியில், "அப்பா! ஒரு உத்வேகமாக, என் நினைவுகளில், எப்போதும் என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள்!" என்று கூறி உள்ளார்.

    இன்று காலை, தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள வீர் பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

    DETAILS

    ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

    பிரதமர் மோடியும் ட்விட்டரில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார்.

    அக்டோபர் 1984இல் அவர் பதவியேற்றபோது அவருக்கு 40 வயதாகி இருந்தது. எனவே, அவர் இந்தியாவின் இளைய பிரதமராக கருதப்பட்டார்.

    அவர் டிசம்பர்-2, 1989 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார்.

    1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்
    சோனியா காந்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  மத்திய அரசு
    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் கேரளா
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  அசாம்

    ராகுல் காந்தி

    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி இந்தியா
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    ராகுல் காந்தி வீட்டிற்கு சென்ற போலீஸ்: நாடு தழுவிய போராட்டத்தை நடத்துமா காங்கிரஸ் இந்தியா
    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் இந்தியா

    காங்கிரஸ்

    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  கர்நாடகா
    ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்  இந்தியா
    ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது சூரத் நீதிமன்றம் இந்தியா
    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி  இந்தியா

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025