NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
    இந்தியா

    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது

    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2023, 01:04 pm 0 நிமிட வாசிப்பு
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
    ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண் ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது

    ஹோலி பண்டிகை அன்று ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட மூன்று இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஹோலி கொண்டாட்டத்தின் போது ஒரு இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொள்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து விசாரித்த டெல்லி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். "உள்ளூர் உளவுத்துறையின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு வீடியோவில் இருந்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஒரு சிறார் உட்பட 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. வீடியோவில் காணப்பட்ட சம்பவம் நடந்தது குறித்து அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்." என்று டெல்லி போலீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அந்த பெண் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்

    டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவை முதலில் அந்த பெண் தான் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதன் பின், அதை நீக்கியுள்ளார். அவர் தற்போது பங்களாதேஷில் இருப்பதாகவும் தான் மனதளவிலும் உடலளவிலும் நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த பெண் இது குறித்து டெல்லி காவல்துறையிலோ ஜப்பானிய தூதரகத்திலோ எந்த புகாரும் அளிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் "மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் அந்த பெண் அளிக்கும் புகாரின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    ஜப்பான்
    டெல்லி

    இந்தியா

    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்? வணிகம்

    ஜப்பான்

    உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்! வாழ்க்கை
    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா

    டெல்லி

    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம் மு.க ஸ்டாலின்
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023