NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
    ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண் ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது

    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹோலி பண்டிகை அன்று ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட மூன்று இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹோலி கொண்டாட்டத்தின் போது ஒரு இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொள்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இது குறித்து விசாரித்த டெல்லி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

    "உள்ளூர் உளவுத்துறையின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு வீடியோவில் இருந்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஒரு சிறார் உட்பட 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. வீடியோவில் காணப்பட்ட சம்பவம் நடந்தது குறித்து அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்." என்று டெல்லி போலீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்தியா

    அந்த பெண் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்

    டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த வீடியோவை முதலில் அந்த பெண் தான் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதன் பின், அதை நீக்கியுள்ளார்.

    அவர் தற்போது பங்களாதேஷில் இருப்பதாகவும் தான் மனதளவிலும் உடலளவிலும் நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

    அந்த பெண் இது குறித்து டெல்லி காவல்துறையிலோ ஜப்பானிய தூதரகத்திலோ எந்த புகாரும் அளிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் "மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் அந்த பெண் அளிக்கும் புகாரின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    ஜப்பான்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    இந்தியா

    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி வங்கிக் கணக்கு
    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை டெல்லி
    மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு! தொழில்நுட்பம்

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025