NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு 
    கடலில் கலந்து கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு

    கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    07:29 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.

    இந்த புயலின் பொழுது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியுள்ளது.

    இந்த எண்ணெய் பரவல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

    அதனால் இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தது.

    அதில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், கடல்நீரில் படர்ந்திருக்கும் எண்ணெய்யை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    கச்சா 

    வழக்கின் விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    இந்த விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதுகுறித்த விசாரணை இன்று(டிச.,12) வந்த நிலையில், சென்னை துறைமுகத்திலிருந்து 380.,மீ தடுப்புகளும், காரைக்கால் துறைமுகத்திலிருந்து 350.,மீ தடுப்புகளும் கொண்டுவரப்பட்டு கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75.,மீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'எண்ணூர் கடல்பகுதியில் கச்சா எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும், இந்த கச்சா எண்ணெய் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, இந்த வழக்கின் அடுத்த விசாரணையினை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கடற்கரை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்! கார்
    விமானிகள், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ரத்து செய்யப்பட்ட 22 விமானங்கள் விமான நிலையம்
    மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு
    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025