NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு-செந்தில் முருகன் போட்டியிடுகிறார்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 01, 2023
    09:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.

    இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக கட்சி சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

    இதனை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுகவில், ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிடப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வெளியாகும் அறிவிப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஓபிஎஸ் அறிக்கை

    பாஜக தரப்பில் நீடிக்கும் குழப்பமான சூழல்

    இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.

    மேலும் இத்தேர்தலில் பாஜக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் தங்கள் வேட்பாளர் வாபஸ் பெற்றுக்கொள்வார் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    முன்னதாக, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தாங்கள் போட்டியிடாமல் விட்டு தருவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.

    எனினும், இதில் பாஜக போட்டியிடுமா அல்லது விலகுமா என்றும், அதிமுகவின் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்குமா இல்லையேல் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்குமா என்பது தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்

    சமீபத்திய

    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025