NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு
    புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு

    புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023
    03:51 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, ஜூன் 1ம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும்.

    இந்த அறிவிப்பானது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

    பள்ளிகள் 

    வரலாறு காணாத அளவிற்கு சுட்டெரிக்கும் வெயில் 

    மேலும் அந்த அறிக்கையில், இந்த அறிவிப்பானது புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    வகுப்பு வாரியாக பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலானது அதிகரித்து காணப்படும்.

    ஆனால் இந்தாண்டு வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.

    இதனால் வெப்பம் தணியும் வரையில் கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் மதிய வேளையில் வெளியே வர வேண்டாம் என்று ஏற்கனவே வானிலை அறிக்கை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதன் காரணமாகவே, புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    புதுச்சேரி

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  பள்ளி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025