NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாசிவராத்திரி விழா நாளை(பிப்.,18) மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவிற்கு அரசு அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் நிலையில், மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், தெருக்கூத்து, நாதசங்கமம், பறை இசை, பக்திஇசை, பட்டிமன்றம், பரதநாட்டியம், கரகாட்டம், காவடி, பக்தி இசை பாடல்கள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகள் தஞ்சை திலகர் திடலில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மேற்பார்வையில் மிக விமர்சையாக நடந்து வருகிறது.

    தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கலாச்சார அமைப்பான தென்னக பண்பாட்டு மையம் சார்பிலும் சிவராத்திரி அன்று கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    தென்னக பண்பாட்டு மையம்

    வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை தென்மாநில பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள்

    இந்த தென்னக பண்பாட்டு மையம் என்பது தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, கர்நாடகா, அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் உள்ள கலைகளை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டின் சிவராத்திரியன்று இந்த அமைப்பின் சார்பில் தஞ்சையை சுற்றியுள்ள சிவாலயங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை தஞ்சை பெரிய கோயிலில் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி, குச்சிப்பிடி, போன்ற தென்மாநில பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    மயிலாடுதுறை மயூரநாதர் மற்றும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களிலும் இந்த அமைப்பானது கலைஞர்களை கோயில் நிர்வாகத்துடன் இணைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தஞ்சை பெரிய கோவில்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு
    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்

    தஞ்சை பெரிய கோவில்

    தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை தமிழ்நாடு
    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி கோவை
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025