NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு 
    சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு

    சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு 

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரை அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் பொழுது எண்ணூர்-கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியது.

    இப்பரவலால் சுற்றுசூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டரில் ஆய்வுச்செய்தது.

    அதில் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து இந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடக்கிறது.

    இந்நிலையில், இப்பணிகளை ஆய்வுச்செய்ய சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு, மீன்வளத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து படகில் சென்றுள்ளார்.

    ஆய்வு 

    90% சுத்தம் செய்யப்படாமல் எண்ணெய் தேங்கியிருப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு 

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'சென்னை எண்ணூர் அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் கசிந்திருந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு பெற்றது' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அலையாத்தி காடு சார்ந்த பகுதிகளில் எண்ணெய் அகற்றும் பணியானது நாளை(டிச.,22)துவங்கவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இதன் பின்னர் எண்ணெய் கசிவு மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெட்டுக்குப்பம் என்னும் பகுதியில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

    இக்கூட்டத்திற்கு சுப்ரியா சாகு தலைமை வகித்தார்.

    அப்போது இவரிடம் அப்பகுதி மீனவர்கள், ஆற்றில் மீன்களை பிரிக்கும் விதமாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து, 'ஆற்றில் எண்ணெய் படலம் வெறும் 10% மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதி 90% சுத்தம் செய்யப்படாமல் எண்ணெய் தேங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்படை
    சென்னை

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    சென்னை

    சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய் கடற்படை
    மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி ஸ்டாலின்
    குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்  அரசு மருத்துவமனை
    கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025