NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 
    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்

    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 06, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் போட்டியிட்டார்.

    இதில் அவர் தனக்கு எதிராக நின்று போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவை வென்று 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார்.

    இந்நிலையில், இவரது இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல சொத்து விவரங்களை அவர் மறைத்துள்ளார்.

    மேலும் தேர்தலின் போது அதிகளவு பணப்பட்டுவாடா நடந்தது என்று கூறப்பட்டிருந்தது.

    அதனையடுத்து இந்த தேர்தல் வழக்கு குறித்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை 

    ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை - 30 நாட்களுக்கு தனது தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாகக்கூறி உத்தரவு 

    முன்னதாக இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு 3 முறை நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார் தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் கூறியதாக தெரிகிறது.

    அவரைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஆஜராகி சாட்சியம் கூறியுள்ளார்கள்.

    இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இன்று(ஜூலை.,6)பிற்பகல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இந்த வழக்கின் தீர்ப்பினை அளித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இத்தீர்ப்பினை தொடர்ந்து, ரவீந்திரநாத் தரப்பில் மேல்முறையீடு செய்ய தீர்ப்பினை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 30 நாட்களுக்கு தனது இந்த தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாகக்கூறி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக
    தேர்தல்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஜெயலலிதா

    அதிமுக

    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் பாஜக
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு
    அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது குறித்து பாஜக விளக்கம் பாஜக அண்ணாமலை
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஓ.பன்னீர் செல்வம்

    தேர்தல்

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    ஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025