NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்
    இந்தியா

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    March 03, 2023 | 12:36 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி வந்து தற்போது அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாக சில காலமாக ஒரு பேச்சு வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வடமாநில ஊழியர்களை தமிழர்கள் தாக்குவது போன்ற சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அண்மையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் பீகார் அதிகாரிகளை தொடர்பு கொள்ள செய்து, தென்மாநிலத்தில் வாழ்வாதாரத்தை தேடிவரும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியதாக தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவும் செய்திருந்தார். இந்நிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய வீடியோக்களை தமிழக காவல்துறை ஆய்வு செய்துள்ளனர்.

    வீடியோக்களை பரப்ப வேண்டாம் - தமிழக காவல்துறை

    ஆய்வு நடத்தியதன் பேரில் அந்த வீடியோக்கள் போலியான பதிவு என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக காவல்துறை சார்பில் இந்தியில் ட்விட்டர் பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் உண்மை தன்மை சரிபார்க்கப்படாமல் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி ஆகும். தயவு செய்து இதுபோன்ற வீடியோக்களை நம்பி பரப்ப வேண்டாம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கை திறம்பட செயல்படுத்தப்பட்டு மிகவும் அமைதியான, பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    தமிழ்நாடு

    கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி கோவை
    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி கோவை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    வானிலை அறிக்கை: மார்ச் 2- மார்ச் 6 வானிலை அறிக்கை

    காவல்துறை

    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் ஆந்திரா
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் உத்தரப்பிரதேசம்
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்

    காவல்துறை

    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023