NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 
    இந்தியா

    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 

    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 
    எழுதியவர் Nivetha P
    May 25, 2023, 12:46 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு

    சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகளை தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் நியமனம் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிக்க இந்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகை, கோவை, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    திட்ட பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளல் 

    தலைமை செயலாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு அதிகாரிகள் டிட்கோ நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, சுகாதார திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நெடுஞ்சாலை துறை போன்ற தமிழகத்தின் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்கள் யாவும் முறையாக செயல்படுகிறதா, எவ்வாறு செயல்படுகிறது? என்பதனையும் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதற்கான அறிக்கையினை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா
    சன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு? மஹிந்திரா
    மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்! வைரல் செய்தி
    உலக பேட்மிண்டன் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய இந்திய ஜோடி! பேட்மிண்டன் செய்திகள்

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்
    திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம் திருவிழா
    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்

    தமிழக அரசு

    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் சென்னை
    கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் திமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023