NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு

    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு 

    எழுதியவர் Nivetha P
    May 25, 2023
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகளை தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் நியமனம் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

    தொடர்ந்து, வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிக்க இந்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகை, கோவை, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    அதிகாரிகள் நியமனம் 

    திட்ட பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளல் 

    தலைமை செயலாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு அதிகாரிகள் டிட்கோ நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, சுகாதார திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நெடுஞ்சாலை துறை போன்ற தமிழகத்தின் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    தமிழக அரசின் திட்டங்கள் யாவும் முறையாக செயல்படுகிறதா, எவ்வாறு செயல்படுகிறது? என்பதனையும் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதற்கான அறிக்கையினை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு
    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை  கர்ப்பிணி பெண்கள்
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு

    தமிழக அரசு

    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலைஞர் கருணாநிதி
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025