Loading...
NEET வழக்கு போராட்டம்: உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை
உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை முன்வைத்துள்ளார்

NEET வழக்கு போராட்டம்: உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2026
06:48 pm

செய்தி முன்னோட்டம்

NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எவ்விதப் பழிவாங்கும் அல்லது சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படக் கூடாது என்ற உறுதியான வாக்குறுதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் முன்வைத்துள்ளார்.

சந்திப்பு

மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு; ஒப்புக்கொண்ட கோரிக்கைகள்

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

இச்சந்திப்பின் போது சோனம் வாங்சுக் முன்வைத்த பின்வரும் கோரிக்கைகளை நேர்மறையாக பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளன.

அவற்றுள், வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவது, கல்வித்துறையின் பொறுப்புடைமையை உறுதிப்படுத்தவும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்த கோரிக்கையை ஆராயவும் பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவது ஆகியவை அடங்கும்.

நிபந்தனை

சோனம் வாங்சுக் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்

சந்திப்பிற்கு பின்னர், மத்திய அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், சோனம் வாங்சுக் பின்வரும் விஷயங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

"மாணவர்கள் நியாயமான கல்வி முறைக்காகவே குரல் கொடுத்தனர். அவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது."

"நான் வாழ விரும்புகிறேன். எனது மாணவர்களிடமும், கல்வியிடமும், எனது வாழ்வை வரையறுத்த பணிகளிடமும் திரும்ப விரும்புகிறேன். ஆனால், யாருக்காக இந்த போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த இளைஞர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுத்துவிட்டு என்னால் அதைச் செய்ய முடியாது."

அரசு உடனடியாக இந்த உத்தரவாதத்தை அளித்தால் தான் உடனடியாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாகவும், தவறினால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர நிர்பந்திக்கப்படுவேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT