NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்
    கிரிமினல் வழக்குகளை விட சிவில் வழக்குகள் தமிழ்நாட்டில் அதிகமாக நிலுவையில் உள்ளன

    தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2024
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக நீதிமன்றங்களில் தற்போது 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு RTI அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    நீதிபதிகள் பற்றாக்குறையினால், வழக்கின் போக்கு காரணமாக ஏற்படும் தாமதம் காரணமாகவும் இந்த தேக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 96 ஆயிரத்து 614 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக RTI அறிக்கை தெரிகிறது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 104 சிவில் வழக்குகள் மற்றும் 24 ஆயிரத்து 591 கிரிமினல் வழக்குகள் என 2 லட்சத்து 3 ஆயிரத்து 695 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பணியிடங்கள்

    காலியான பணியிடங்கள்

    தமிழக கீழமை நீதிமன்றங்களில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 436 சிவில் வழக்குகள் மற்றும் 6 லட்சத்து 63 ஆயிரத்து 483 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 13 லட்சத்து 92 ஆயிரத்து 919 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கிரிமினல் வழக்குகளை விட சிவில் வழக்குகள் தமிழ்நாட்டில் அதிகமாக நிலுவையில் உள்ளன.

    சென்னை ஐகோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 75. தற்போது, 62 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

    மாவட்ட நீதிபதி பணியிடங்கள் 360-ஆக இருக்கின்றன, இதில் 87 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்பி, தாமதமின்றி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே முக்கியமானது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வழக்கு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை

    சென்னை உயர் நீதிமன்றம்

    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி  அதிமுக
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  சென்னை
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து உயர்நீதிமன்றம்
    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025