NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள் 

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் வெடித்தது.

    டோடா மாவட்டத்தின் மேல் பகுதியில் உள்ள கோலி-காடி காடுகளில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    தேடுதல் நடவடிக்கையின் போது, ​​மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் 2 முதல் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததால் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.

    இந்தியா 

    காட்டுக்குள் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை 

    நேற்று கதுவாவின் மச்செடி பகுதியில் ரோந்துக் குழுவினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.

    நேற்று பிற்பகல் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் இராணுவ டிரக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பின்னர் அருகில் உள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக அதிகாரிகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

    இந்நிலையில், அவர்களை பிடிப்பதற்காக சென்ற பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, என்கவுண்டர் தொடங்கியுள்ளது.

    நேற்று நடந்த தாக்குதலுக்கு பழி வாங்காமல் விடமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே இன்று மதியம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    பூஞ்ச் ​​தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக மொபைல் இன்டர்நெட் முடக்கம் இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர்: மசூதியில் வைத்து ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி சுட்டு கொலை  காவல்துறை
    ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாக தகவல்  பயங்கரவாதம்
    'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் ​​தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம்  இந்தியா

    இந்தியா

    பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை கர்நாடகா
    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கேரளா
    இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் நீட் தேர்வு
    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார் மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025