NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்
    சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 22, 2023
    09:40 am

    செய்தி முன்னோட்டம்

    நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பணமோசடி வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் நேற்று முடக்கியது.

    டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெடின்(AJL) ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் யங் இந்தியாவின்(YI) ரூ. 90.21 கோடி மதிப்பிலான AJL ஈக்விட்டி பங்குகள் ஆகியவை நேற்று முடக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவைகளாகும்.

    அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை குறித்து பேசி இருக்கும் காங்கிரஸ், இதை "பழிவாங்கும் தந்திரம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    'யங் இந்தியா' மூலம் 'AJL'-ஐ கையகப்படுத்தும் போது, உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்கள் பணமோசடி செய்ததாக 2013ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டினார்.

    ஜஃபிவ்

    குற்றத்தின் வருவாயை வைத்திருப்பதால் சொத்துக்கள் பறிமுதல் 

    இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

    அவரது புகாருக்கு பதிலளித்த நீதிமன்றம், அமலாக்க இயக்குநரகம் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று 2014இல் உத்தரவிட்டது.

    காங்கிரஸுக்குச் சொந்தமான 'யங் இந்தியா' உட்பட ஏழு பிரதிவாதிகளை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்மானித்தது.

    கிரிமினல் நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல், நேர்மையற்ற முறையில் சொத்துக்களைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றங்கள் அந்த பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டது.

    இந்நிலையில், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்ட அமலாக்க இயக்குநரகம், குற்றத்தின் வருவாயை வைத்திருப்பதால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸுடன் தொடர்புடைய அமைப்புகளின் சொத்துக்களை தற்காலிகமாகப் பறிமுதல் செய்வதாக தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காங்கிரஸ்
    டெல்லி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    இந்தியா

    உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பிடித்த பெண்கள் - ஆய்வின் தகவல் மது
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம் டெல்லி
    முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ் முகமது ஷமி

    காங்கிரஸ்

    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்? திமுக
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  சோனியா காந்தி
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா

    டெல்லி

    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி தமிழ்நாடு
    ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்  உச்ச நீதிமன்றம்
    அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம் அரவிந்த் கெஜ்ரிவால்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025