NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா 
    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா

    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் ராசிபுரம் அருகேவுள்ள பட்டணம் பகுதியில் கருப்பனார் கோயில் உள்ளது.

    இந்த கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

    இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும்.

    கொரோனா காலகட்டத்தில் இந்த சுழற்சி முறை விடுபட்ட நிலையில், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் திருவிழா மிக விமர்சையாக நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி, ஏராளமான பக்தர்கள் சூழ இத்திருவிழா அரங்கேறியுள்ளது.

    இந்த கோயிலுக்கென தனி கட்டிடங்கள் ஏதுமில்லை.

    அதனால் பக்தர்கள் இங்குள்ள வேல்கம்புகள் மற்றும் மணிகளோடு தரைத்தளத்தில் அமைந்திருக்கும் பள்ளத்து கருப்பனாருக்கு திருவிழாவின் பொழுது மட்டும் தீபாராதனை காட்டுவர்.

    சாமி

    திருவிழா நாட்களில் கிடா வெட்டி விருந்து 

    இந்த திருவிழாவிற்காக கோவை, சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அதன்படி பக்தர் ஒருவர் தனது வேண்டுதலுக்காக ஒரு டன் எடை மற்றும் 21 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட 2 அரிவாள்களை செலுத்தினார்.

    அதற்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அவை கிரேன் உதவியுடன் நடப்பட்டது.

    மேலும் இங்கு திருவிழா நாட்களில் மட்டுமே கிடா வெட்ட அனுமதி உண்டு.

    அதனை தவிர்த்து மற்ற நாட்களில் இங்கு கிடா வெட்ட கூடாது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    தமிழ்நாடு

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது வேங்கை வயல்
    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  குன்னூர்
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025