NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்

    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்

    எழுதியவர் Nivetha P
    Dec 01, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா மாநிலத்தின் கிருஷ்ணா நதியின் இடையே கட்டப்பட்டுள்ளது நாகார்ஜுன சாகர் அணை.

    இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 2 மாநிலங்களுக்கும் பொதுவானது என்னும் பட்சத்தில் இதுகுறித்த பிரச்சனைகளுக்கான தீர்விற்கு கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் உள்ளது.

    நாகார்ஜுன அணையில் மொத்தம் 29 மதகுகள் அமைந்துள்ள நிலையில் அதில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவிற்கும்,

    14 முதல் 29 மதகுகள் ஆந்திராவிற்கும் உரியதாகும்.

    இந்த அணையின் நீர்திறப்பு கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் மூலமே செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கனஅடி நீர் திறக்க ஆந்திரா அரசு முடிவு செய்து, அணையை திறந்துவிட ஆந்திரா அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.

    ஆனால் தெலுங்கானா அதிகாரிகள் அவர்களை அணைக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    அணை 

    சுமார் 2 மணிநேரம் அப்பகுதியில் பெரும் பதற்றம்

    மேலும், ஆந்திர அதிகாரிகள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகளை போட்டு வைத்த தெலுங்கானா அதிகாரிகள் அணையின் கட்டுப்பாட்டு அறையையும் பூட்டியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆந்திரா அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அங்கு குவித்தனர்.

    மேலும், தெலுங்கானா அதிகாரிகளின் தடைகளை தகர்த்து, பூட்டுகளை உடைத்து அணையில் நீரினை திறந்துவிட்டுள்ளனர்.

    உடனே தெலுங்கானா அதிகாரிகள் மின்சாரத்தினை துண்டித்துள்ளனர். ஆந்திரா அதிகாரிகள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதிய மோட்டார்களை கொண்டு வந்து தங்கள் எல்லைப்பகுதி மின்சாரத்தினை பயன்படுத்தி இயக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த மோதல் காரணமாக சுமார் 2 மணிநேரம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    தெலுங்கானா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆந்திரா

    தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் பாஜக
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு உலகம்
    ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி  கோவில்கள்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    காவல்துறை

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்

    காவல்துறை

    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025