NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்

    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்

    எழுதியவர் Nivetha P
    Feb 13, 2023
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதில் ஓர்பகுதியாக சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையம் ஒன்றினை அவர் அமைத்துள்ளார்.

    இதன் திறப்புவிழா நேற்று(பிப்.,12) நடைபெற்ற நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த புத்தகவிற்பனை நிலையத்தை துவக்கிவைத்துள்ளார்.

    இதனைதொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் அவர்கள், 'உயிரே, உறவே, தமிழே வணக்கம். இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இதனை காக்க வேண்டியது என் கடமை, தேவை' என கூறினார்.

    தொடர்ந்துபேசிய அவர், அரசியல், கலாசாரம் என்பதை தனித்தனியாக வைத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறினார்.

    பா.ரஞ்சித் பேச்சு

    'ஜாதி என்பது கொடூரமான ஆயுதம். அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும்'-கமல்

    இதனையடுத்து, தன்னுடைய முக்கியமான அரசியல் எதிரி ஜாதி தான், 21வயதாக இருக்கும் போதிருந்து இதனை தாம் சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.

    ஜாதி என்பது கொடூரமான ஆயுதம். அதை அரசியலில் இருந்து நீக்கவேண்டும் என்பது அம்பேத்கர் வகுத்ததாகும்.

    ஆனால் இது இன்றுவரை நிறைவேறவில்லை என்று கூறியுள்ளார்.

    மேலும், இந்தத்தொடர் போராட்டத்தின் ஓர் நீட்சியாகத்தான் நீலம் பண்பாட்டு மையத்தை தாம் பார்ப்பதாகவும், மய்யம், நீலம் என்பதற்கு எழுத்தாக்கம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம், ஆனால் இரண்டின் அர்த்தம் ஒன்றுதான் என்று கூறினார்.

    தன்னையும் அவர்களுள் ஒருவராக சேர்த்துக்கொண்டதில் பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனைதொடர்ந்து பா.ரஞ்சித் பேசுகையில், கமலின் எழுத்துப்பாணியை பார்த்து தாம் வியப்பதாகவும், வியாபாரநோக்கில் மட்டுமல்லாமல் கலைஞனாக கலாச்சார இடைவெளியை சரியாக பயன்படுத்தியவர் கமல் என்றும் பேசினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    பா ரஞ்சித்
    சென்னை

    சமீபத்திய

    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே

    கமல்ஹாசன்

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? பிக் பாஸ் தமிழ்
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! திமுக
    2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் தமிழ் திரைப்படங்கள்

    பா ரஞ்சித்

    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் விக்ரம்
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு தமிழ்நாடு
    சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம் ஓடிடி

    சென்னை

    போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி! தமிழ்நாடு செய்தி
    இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம் இந்தியா
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025