NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 
    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி மாநிலம் மிக சிறிய யூனியன் பிரதேசமாகும்.

    இங்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் காரில் செல்லும் பொழுது முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்கள் நிறுத்திவைக்கப்பட்டு, அவர்கள் வாகனம் விரைந்து செல்லும் வகையில் காவல்துறை ஏற்பாடுகளை செய்வது வழக்கம்.

    இதற்கிடையே வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரிக்கும்.

    இதனால் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தொடர்ந்து சிக்னல்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று(மே.,21) முதல் அமைச்சர் ரங்கசாமி காரில் வருவதன் காரணத்தினால் சிக்னல்களை நிறுத்திய காவல்துறை அவரது காருக்கு மட்டும் செல்வதற்கு வழிவிட்டுள்ளனர்.

    நெரிசல் 

    தான் வரும் தகவலை வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவு 

    அப்போது முதல்வர் ரங்கசாமி, மூன்று வழிகளிலும் மக்கள் கடும்வெயிலில் நின்று அவதிப்படுவதை கவனித்துள்ளார்.

    அதன்பின்னர், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசிய அவர், தனது கார் வருகையில் எந்த சிக்னலையும் நிறுத்தவேண்டாம் என்றும், தன்னால் பொதுமக்கள் [பாதிக்கப்பட கூடாது என்றும் கூறியுள்ளார்.

    மேலும், மக்களோடு மக்களாக நின்று முறைப்படி சாலையை நான் கடந்து செல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தான் வரும் தகவலினை சிக்னலில் நிற்கும் காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவலளித்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதன் படி, அவர் இன்று(மே.,22)காலை சட்டப்பேரவைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமியின் கார் அவர் கூறியவாறு அனைத்து சிக்னலிலும் மக்களோடு மக்களாக நின்று தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதல் அமைச்சர்
    புதுச்சேரி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு

    புதுச்சேரி

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்: வானிலை அறிக்கை இந்தியா
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்: வானிலை அறிக்கை  வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  தமிழிசை சௌந்தரராஜன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025