NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 
    மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2023
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது.

    குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

    இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அதில் அவர், "கடந்த 2 நாட்களாக தென்தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அதிலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் சுமார் 40லட்சம் மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களும், தாமிரபரணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் அதனையொட்டியுள்ள பகுதிகளும் மோசமான நிலையில் உள்ளது என்றும் அவர் எழுதியுள்ளார்.

    மழை

    உணவு பொருட்களும் ஹெலிகாப்டர்கள் மூலமே எடுத்து செல்லப்படுவதாக குறிப்பிட்டுள்ளார் 

    மேலும் அவர், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளுக்காக என்.டி.ஆர்.எப் மற்றும் எஸ்.டி.ஆர்.எப் உள்ளிட்ட குழுக்கள் திரட்டப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதுமிருந்து நிவாரண பொருட்களும் திரட்டப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    சாலைகள் துண்டிக்கப்பட்ட காரணத்தினால் தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை கொண்டு மக்களை மீட்பு குழுவினர் மீட்டெடுத்து வருகிறார்கள்.

    உணவு பொருட்களும் ஹெலிகாப்டர்கள் மூலமே எடுத்து செல்லப்படுகிறது.

    இத்தகைய பெரும் பேரிடர் காரணமாக அதிக எண்ணிக்கை கொண்ட குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மீட்கவும், நிவாரண பொருட்களை விநியோகிக்கவும் எங்களுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது.

    எனவே அதிகபட்ச ஹெலிகாப்டர்களை வழங்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கோரிக்கை கடிதம் 

    #BREAKING | மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!#SunNews | @mkstalin | #TNRains pic.twitter.com/OJyRcft8KQ

    — Sun News (@sunnewstamil) December 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    ராஜ்நாத் சிங்
    கனமழை
    மீட்பு பணி

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    மு.க ஸ்டாலின்

    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு  சென்னை
    அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும் சென்னை
    திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி  உதயநிதி ஸ்டாலின்
    காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்  தமிழ்நாடு

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா

    கனமழை

    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  சென்னை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  சென்னை மாநகராட்சி
    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ சென்னை

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025