NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
    விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்

    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்

    எழுதியவர் Arul Jothe
    Jun 07, 2023
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.

    900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், அதை தவிர 200 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்த ரயில் விபத்து, நாடு முழுவதும் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    odisa Train Accident

    விரைவில் குணமடைய சிறப்பு வழிபாடு

    இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய தமிழகத்தின் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு வழிபாடுகளும் பிராத்தனைகளும் நடைபெற்றன.

    சங்கராச்சாரியார் ஜெகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளின் படி இந்த சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பயணிகள் சீக்கிரம் குணமடைய பிராத்தனை செய்தனர்.

    இதைத்தவிர உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன் உட்பட பலரும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    ரயில்கள்
    காஞ்சிபுரம்
    கோவில்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    ரயில்கள்

    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தெற்கு ரயில்வே
    சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் மதுரை
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை தெற்கு ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!  கோவில்கள்

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025