NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
    நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    எழுதியவர் Nivetha P
    Nov 20, 2023
    07:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,20) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு, நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் விநியோகம் செய்யும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.

    இந்த தீர்வானது அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கைக்கு பிறகு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அவர் ரூ.14 கோடியே 86 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொன்னேரி, திருவட்டார், கிள்ளியூர் வட்டாட்சி அலுவலக கட்டடங்கள், தேனி கூட்டரங்கு கட்டிடம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார்.

    முதல்வர் 

    இணையவழியிலேயே கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது 

    மேலும் அவர் இணையவழி மூலம் நில அளவைக்கு(F-Line Measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் அறிமுகம் செய்து துவக்கி வைத்துள்ளார்.

    இந்த புதிய வசதி அறிமுகம் செய்துள்ள நிலையில் இனி பொதுமக்கள் தங்கள் நிலத்தினை அளப்பதற்காக விண்ணப்பிக்க வட்டாட்சியர் அலுவலகம் செல்லவேண்டிய அவசியமில்லை.

    அதற்கு மாற்றாக https://tamilnilam.tn.gov.in/citizen என்னும் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் இதற்கான கட்டணத்தையும் இணையவழியிலேயே செய்ய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாம்.

    மேலும் நிலஅளவை செய்யப்படும் தேதி மற்றும் நேரம் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

    நில அளவை செய்து முடித்த பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கையினை மனுதாரர் https://eservices.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்  பருவமழை
    தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு  மழை
    'கண்கள் இரண்டால்' முதல் 'மஞ்சள் வெயில் மாலை' வரை- தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர தாமரை ஹிட்ஸ் சினிமா
    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை அறிக்கை

    மு.க ஸ்டாலின்

    முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி
    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்  தமிழ்நாடு
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை  ஓ.பன்னீர் செல்வம்
    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025