NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
    இந்தியா

    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்

    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2022, 03:07 pm 1 நிமிட வாசிப்பு
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
    துப்பாக்கியால் சுடப்பட்டு 7 வயது சிறுவன் பலி

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரம் தாலுகாவில் கடுசிவனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ், இவருக்கு வயது 51. இவரது தோட்டத்தில் இஸ்லாமியர்களான அமீனுல்லாஹ்'வும் அவரது மனைவியும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 15 வயதில் சாதிக் என்கிற மகனும், 7 வயதில் சாமாபின் என்கிற மகனும் உள்ளனர். சம்பவ தினத்தன்று வழக்கம் போல் அமீனுல்லாஹ்'வும் அவரது மனைவியும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர், அவர்கள் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும், திடிரென்று மல்லேஷிற்கு சொந்தமான அவரது பண்ணை வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது, அங்கு சுவரில் தொங்க விடப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை இருவரும் எடுத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறார்கள்.

    நிஜ துப்பாக்கி என்று தெரியாமல் ட்ரிக்கரை அழுத்திய சகோதரன்

    அந்நிலையில், அது நிஜ துப்பாக்கி என்று அறியாத சாதிக் எதிர்பாரா விதமாக துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தியுள்ளார். அதிலிருந்து வெளியேறிய குண்டு சாமாபின் மீது பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான். துப்பாக்கி சத்தத்தை கேட்டு ஓடி வந்த பெற்றோர் சாமாபின் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர். இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சாமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு முறைகள் எதையும் முறையாக கையாளாமல் வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்த மல்லேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது அவரை கைது செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    இந்தியா

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    வைரல் செய்தி

    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை சாட்ஜிபிடி
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் கோலிவுட்
    விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்? கோலிவுட்
    முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்? அமெரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023