NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்
    துப்பாக்கியால் சுடப்பட்டு 7 வயது சிறுவன் பலி

    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2022
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரம் தாலுகாவில் கடுசிவனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ், இவருக்கு வயது 51.

    இவரது தோட்டத்தில் இஸ்லாமியர்களான அமீனுல்லாஹ்'வும் அவரது மனைவியும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 15 வயதில் சாதிக் என்கிற மகனும், 7 வயதில் சாமாபின் என்கிற மகனும் உள்ளனர்.

    சம்பவ தினத்தன்று வழக்கம் போல் அமீனுல்லாஹ்'வும் அவரது மனைவியும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர், அவர்கள் அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும், திடிரென்று மல்லேஷிற்கு சொந்தமான அவரது பண்ணை வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

    அப்போது, அங்கு சுவரில் தொங்க விடப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை இருவரும் எடுத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறார்கள்.

    ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சிறுவன்

    நிஜ துப்பாக்கி என்று தெரியாமல் ட்ரிக்கரை அழுத்திய சகோதரன்

    அந்நிலையில், அது நிஜ துப்பாக்கி என்று அறியாத சாதிக் எதிர்பாரா விதமாக துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தியுள்ளார்.

    அதிலிருந்து வெளியேறிய குண்டு சாமாபின் மீது பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.

    துப்பாக்கி சத்தத்தை கேட்டு ஓடி வந்த பெற்றோர் சாமாபின் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.

    இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சாமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு முறைகள் எதையும் முறையாக கையாளாமல் வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்த மல்லேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது அவரை கைது செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்: இளங்கலையில் அதிரடி மாற்றங்கள்! இந்தியா
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! தமிழ்நாடு
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி வைரஸ்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025