NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது 

    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பை BMW விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா இன்று கைது செய்யப்பட்டார்.

    மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார்.

    இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது.

    அவர் குடிபோதையில் காரை ஓட்டி சென்று ஒரு பைக்கின் மீது மோதியதில், அதில் இருந்த ஒரு பெண் உயிரிழந்தார்.

    இந்நிலையில், விபத்து நடந்த அன்றே மிஹிர் ஷா தலைமறைவாகிவிட்டார்.

    அவரது தந்தையும் அரசியல் தலைவருமான ராஜேஷ் ஷாவை போலீசார் ஏற்கனெவே கைது செய்துவிட்டனர்.

    இந்தியா 

    1.5 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்த பெண் 

    மீனவர்களான காவேரி நக்வாவும் அவரது கணவர் பிரதீக் நக்வாவும் சசூன் டாக்கில் மீன்களை வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றனர்.

    அப்போது, மிஹிர் ஷா ஓட்டிச் சென்ற BMW கார் அவர்கள் சென்ற ஸ்கூட்டியை மோதிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது.

    அந்த விபத்தின் போது காரில் சிக்கிய காவேரி நக்வாவை 1.5 கி.மீ வரை மிஹிர் ஷாவின் கார் இழுத்து சென்றதற்கான ஆதரங்களும் கிடைத்துள்ளன.

    1.5 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட காவேரி நக்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    பின்னர் மிஹிர் ஷாவின் கார் பாந்த்ரா கிழக்கில் உள்ள கலா நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த போது, மிஹிர் ஷாவின் டிரைவரும் அவரோடு தான் இருந்தார்.

    இந்தியா 

    டிரைவர் மீது பழியை போட சொன்ன அரசியல் தலைவர் ராஜேஷ் ஷா

    இந்நிலையில், விபத்து நடந்ததை உணர்ந்ததும் மிஹிர் ஷா தனது தந்தைக்கு அழைத்து விவரத்தை சொல்லி இருக்கிறார்.

    அவரது தந்தையான ராஜேஷ் ஷா, உடனடியாக டிரைவரிடம் காரை கொடுத்துவிட சொல்லி மிஹிர் ஷாவிடம் கூறி இருக்கிறார்.

    ஆனால், 1.5 கி.மீ வரை மிஹிர் ஷாவின் கார் நிற்காமல் சென்றதும், அதன் பிறகு டிரைவரிடம் மிஹிர் ஷா தனது காரை கொடுத்ததும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகிவிட்டது.

    இதனையடுத்து, மிஹிர் ஷா மீது பிரிவுகள் 105(கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 281(கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது), 125-பி(உயிர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துதல்), 238, 324(4), வாகனச் சட்டம் 184, 134ஏ, 134பி, 187 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    விபத்து
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மும்பை

    இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி இந்தியா
    ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை துப்பாக்கி சூடு
    மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார் மகாராஷ்டிரா

    விபத்து

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி நொய்டா
     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல் ஆந்திரா
    ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் ராஜஸ்தான்
    பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம் உத்தரப்பிரதேசம்

    இந்தியா

    'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை  மக்களவை
    விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது விஜய் மல்லையா
    பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை கர்நாடகா
    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025