NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை
    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநிலத்தில் பணிபுரியும் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அணுகியுள்ளது.

    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    ஹோலி பண்டிகைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறார்கள், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரிப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் நேற்று(மார் 5) தெரிவித்தார்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று கூறப்பட்டதை அடுத்து தமிழ்நாடு காவல்துறை, வணிக மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.

    இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநிலத்தில் பணிபுரியும் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அணுகியது.

    "பீகார் அரசின் அதிகாரிகள் குழு இன்று திருப்பூருக்கு வருகை தந்தது. சங்க உறுப்பினர்கள், தொழிலாளர் சங்கம் மற்றும் பிற சங்கங்கள் உட்பட அனைவருடனும் அவர்கள் விவாதித்துள்ளனர்." என்று திருப்பூர் மாவட்ட துணை ஆணையர் கூறியுள்ளார்.

    திருப்பூர்

    போலிச் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை

    மேலும், ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதையும், மக்கள் பீதியடையாமல் இருக்க திருப்பூர் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் பீகார் அரசின் அதிகாரிகளிடம் காட்டியுள்ளோம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

    "பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளால் வெளியேறுவதாக சில செய்திகள் பரப்பப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் ஹோலி கொண்டாட்டங்களுக்கு செல்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்," என்று ஆட்சியர் வினீத் மேலும் கூறி இருக்கிறார்.

    இதுகுறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஷஷாங்க் சாய் கூறியதாவது: "போலிச் செய்திகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்கள் மற்றும் சேனல்கள் மீது மாவட்ட காவல்துறை நிர்வாகமும், நகர காவல் நிர்வாகமும் இணைந்து FIR பதிவு செய்துள்ளது."

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருப்பூர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    தமிழ்நாடு

    பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு தமிழ் திரைப்படம்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 24- பிப்ரவரி 28 வானிலை அறிக்கை
    மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம் ஓ.பன்னீர் செல்வம்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025