NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா 
    ராஜினாமா செய்த மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி

    மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 08, 2023
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த ஏழு ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதை மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனமும் உறுதி செய்திருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக தங்களுடன் பயணித்து, தங்களது வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    ஆனந்த் மகேஸ்வரியின் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்களும் புதிய பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

    அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய தலைவராக AWS இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனீத் சந்தோக் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட்

    பதவி உயர்வு பெற்ற முக்கிய நிர்வாகிகள்: 

    ஆனந்த மகேஸ்வரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வந்த இரினா கோஷ், நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொதுத்துறை வணிகத்தின் செயல்பாட்டு இயக்குநராக செயல்பட்டு வந்த நவ்தேஜ் பால், புதிய செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    நவ்தேஜ் பால் விட்டுச் சென்ற இடத்தில் வெங்கட் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மைக்ரோசாஃப்டில் இணைவதற்கு முன்னதாக ஹனிவெல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த ஆனந்த் மகேஸ்வரி, 1996-ல் BIT-ல், பொருளியில் துறையில் முதுகலைப் பட்டமும், 1998-ல் அகமதாபாத் ஐஐஎம்மில் MBA பட்டமும் பெற்றவர்.

    மேலும், கடந்த ஏப்ரலில் தான், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் 2023-24ம் ஆண்டிற்கான தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மைக்ரோசாஃப்ட்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  எலான் மஸ்க்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு

    இந்தியா

    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன? பான் கார்டு
    மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை ஒடிசா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 3 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025