NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / '5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    '5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு 

    '5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென கலந்து கொண்டார்.

    அனைத்து மாநிலங்களும் தங்கள் கவலைகள் மற்றும் பிரச்சனைகளை முன்வைக்கும் வாய்ப்பை பெறும் இந்த ஒன்பதாவது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை புறக்கணிக்க பல எதிர்க்கட்சி முதல்வர்கள் முடிவு செய்திருந்தனர்.

    இந்நிலையில், நேற்று, மேற்கு வங்காளத்திற்கு அரசியல் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் நிதி ஆயோக் கலந்து கொள்வதாக மம்தா பானர்ஜி கூறினார்.

    "பட்ஜெட் கூட்டுறவு கூட்டாட்சித் தன்மையைக் காட்டுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்... ஆனால் அது பாகுபாட்டை மட்டுமே காட்டுகிறது" என்று அவர் கூறினார்.

    இந்தியா 

    கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி முதல்வர்கள் 

    இந்நிலையில், அந்த கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, 5 நிமிடத்திற்கு மேல் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும், தனது மைக்கை அணைத்துவிட்டார்கள் என்றும் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

    "நான் பேசிக்கொண்டிருந்தேன், எனது மைக் நிறுத்தப்பட்டது...எனக்கு முன்பிருந்தவர்கள் 10-20 நிமிடங்கள் பேசினர். நான் மட்டுமே எதிர்கட்சியில் இருந்து பங்கேற்றேன். எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது அவமானகரமானது" என்று பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

    பானர்ஜியின் கூற்றுக்களை மத்திய அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.

    தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், கேரளாவின் பினராயி விஜயன், பஞ்சாபின் பகவந்த் மான், கர்நாடகாவின் சித்தராமையா, ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி உட்பட பல எதிர்க்கட்சி முதல்வர்கள் இந்த கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மம்தா பானர்ஜி
    இந்தியா

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    மம்தா பானர்ஜி

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா

    இந்தியா

    ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம் உத்தரப்பிரதேசம்
    திருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண் விபத்து
    மருத்துவமனை, விளையாட்டு வளாகம் அடங்கிய தனது மாபெரும் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டினார் அதிபர் புதின் ரஷ்யா
    0001 எனும் ஃபேன்ஸி கார் நம்பர் 23 லட்சத்துக்கு விற்பனை: வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன? போக்குவரத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025