LOADING...
100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய வரைவு விதிகள்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றத்திற்கான வரைவு விதிகள் வெளியானது

100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய வரைவு விதிகள்

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. 'விக்சித் பாரத் - கியாரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம் 2025' (VB-G RAM G) என்ற பெயரிலான இந்த புதிய சட்டம், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

வரைவு விதிகள்

பொதுமக்கள் ஆலோசனைக்காக வரைவு விதிகள்

இச்சட்டத்தின் பிரிவு 33 மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரைவு விதிகள் தற்போது பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைக்காகப் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி வடிவம் கொடுக்கப்படுவதற்கு முன்பு, மாநில அரசுகள், நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பெறுவதே இதன் நோக்கமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த வரைவு கட்டமைப்பில் தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு, மத்திய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதக் குழு மற்றும் நிர்வாகச் செலவுகள் குறித்த விதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்குதல், வேலையின்மைப் படி (Unemployment Allowance), குறைதீர்க்கும் வழிமுறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இச்சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிறுவன, நிதி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே இந்த விதிகளின் முதன்மை நோக்கமாகும் என்று ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தொழிலாளர் பாதுகாப்பு

மாற்றத்தின் போது தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு

தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தில் இருந்து புதிய திட்டத்திற்கு மாறுவதற்கான காலக்கட்டத்தை (Transition Period) எவ்வித தடையுமின்றி கடப்பதற்கான வழிகாட்டுதல்களும் இதில் விளக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் புதிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, தற்போது நடந்து வரும் வேலைகளின் தொடர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி, தற்போது இ-கேஒய்சி (e-KYC) மூலம் சரிபார்க்கப்பட்ட தொழிலாளர்களின் பழைய வேலை அட்டைகள் (Job Cards) புதிய திட்டத்திலும் தொடர்ந்து செல்லும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Advertisement