NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம், அரசுப்பள்ளி மாணவர்ளுக்கு இலவசப் பயணம்

    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 31, 2023
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதனைக் கொண்டாடும் விதமாக நேற்றும், இன்றும் பல்வேறும் நிகழ்ச்சிகளை நடைபெற்றிருக்கின்றன.

    1873ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மேட்டப்பாளையும் ரயில் நிலையமானது, 150 ஆண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், இன்று மலை ரயிலில் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி, கல்லாறு ரயில் நிலையம் வரை பயணித்து பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மாணவர்களை சேர்த்திருக்கிறது உதகை மலை ரயில்.

    இந்தப் பயணத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் கொண்டாடியதுடன், பழங்கால ரயில் நிலையம் குறித்த தகவல்களையும் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்

    மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம்:

    மாணவர்கள் இலவசமாக மலை ரயிலில் அழைத்துச் சென்றதைத் தவிர்த்து, எட்டு கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.

    இந்த ஓட்டப்பந்தயத்தில், ரயில் நிலைய ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மேட்டுப்பாளையும் ரயில் நிலைய 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

    ஆங்கிலேயர் காலத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, 1897ம் ஆண்டு மேட்டுப்பாளையும் மற்றும் குன்னூர் இடையேயும் புதிய பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    கோடைக் காலம் மற்றும் கடும் வெயில் காலங்களில் ஊட்டிக்குப் பயணிக்கவும், மலையிலிருந்து தேயிலையை கொண்டு வரவும் இந்தப் பாதையை அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோயம்புத்தூர்
    ரயில்கள்

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது  மு.க ஸ்டாலின்
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு  இந்தியா

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா

    ரயில்கள்

    ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இந்தியா
    தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்  சென்னை
    ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025