NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
    இந்தியா

    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    August 31, 2023 | 04:17 pm 0 நிமிட வாசிப்பு
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம், அரசுப்பள்ளி மாணவர்ளுக்கு இலவசப் பயணம்

    மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதனைக் கொண்டாடும் விதமாக நேற்றும், இன்றும் பல்வேறும் நிகழ்ச்சிகளை நடைபெற்றிருக்கின்றன. 1873ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மேட்டப்பாளையும் ரயில் நிலையமானது, 150 ஆண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், இன்று மலை ரயிலில் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி, கல்லாறு ரயில் நிலையம் வரை பயணித்து பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மாணவர்களை சேர்த்திருக்கிறது உதகை மலை ரயில். இந்தப் பயணத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் கொண்டாடியதுடன், பழங்கால ரயில் நிலையம் குறித்த தகவல்களையும் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம்:

    மாணவர்கள் இலவசமாக மலை ரயிலில் அழைத்துச் சென்றதைத் தவிர்த்து, எட்டு கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. இந்த ஓட்டப்பந்தயத்தில், ரயில் நிலைய ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மேட்டுப்பாளையும் ரயில் நிலைய 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, 1897ம் ஆண்டு மேட்டுப்பாளையும் மற்றும் குன்னூர் இடையேயும் புதிய பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கோடைக் காலம் மற்றும் கடும் வெயில் காலங்களில் ஊட்டிக்குப் பயணிக்கவும், மலையிலிருந்து தேயிலையை கொண்டு வரவும் இந்தப் பாதையை அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    கோயம்புத்தூர்
    ரயில்கள்

    தமிழ்நாடு

    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு வாகனம்
    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை இந்தியா
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல் செந்தில் பாலாஜி
    வேளாங்கண்ணி மாதா தேவாலய பெருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது திருவிழா

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா

    ரயில்கள்

    பழனி முருகன் கோயில் - 75 பேர் அமர்ந்து செல்லும் ஏசி வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டி  திண்டுக்கல்
    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது? மதுரை
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் சென்னை
    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து மத்திய பிரதேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023