NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை மக்களுக்கு குட் நியூஸ்; மெட்ரோ திட்ட நிலம் கையகப்படுத்தலுக்காக ₹154 கோடி ஒதுக்கீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை மக்களுக்கு குட் நியூஸ்; மெட்ரோ திட்ட நிலம் கையகப்படுத்தலுக்காக ₹154 கோடி ஒதுக்கீடு
    கோவை மெட்ரோ நிலம் கையகப்படுத்தலுக்காக Rs.154 கோடி ஒதுக்கீடு

    கோவை மக்களுக்கு குட் நியூஸ்; மெட்ரோ திட்ட நிலம் கையகப்படுத்தலுக்காக ₹154 கோடி ஒதுக்கீடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 02, 2025
    04:07 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் சாலையில் உள்ள கணபதி பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிக்காக ₹154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்களால் கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் 34.8 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் ₹10,740 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல் நடைபாதையானது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து நீலம்பூர் வரை விமான நிலையம் வழியாக (20.4 கி.மீ.), இரண்டாவது வழித்தடம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் வரை (14.4 கி.மீ.) நீட்டிக்கப்படும்.

    திட்ட அறிக்கை

    விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு

    இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்படும், விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர் எம்பி கணபதி பி.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சமீபத்தில் சென்னையில் சிஎம்ஆர்எல் அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    குறிப்பாக டெக்ஸ்மோ ரயில் மேம்பாலம் மற்றும் சூர்யா மருத்துவமனைக்கு இடையே உள்ள கணபதி பகுதியில், குறுகிய சாலைகள் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்பகுதியில் 3.1 கிமீ சாலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மெட்ரோ திட்டத்திற்கு 24 மீட்டர் அகலத்தில் 1.1 கிமீ நீளத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    மெட்ரோ
    ரயில்கள்
    கோயம்புத்தூர்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    கோவை

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 27 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மெட்ரோ

    டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி டெல்லி
    மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் கடற்கரை
    சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக புதிய அறிமுகம் சென்னை
    'Paytm' செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் சென்னை

    ரயில்கள்

    அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து அசாம்
    தீபாவளி பண்டிகையில் இந்தியாவின் பிரபல சமய தலங்களுக்கு செல்ல IRCTCயின் சிறப்பு ஏற்பாடு தீபாவளி
    தீபாவளிக்கு 40 சிறப்பு ரயில்கள்; பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே முடிவு தீபாவளி
    தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்? தமிழக அரசு

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் தமிழ்நாடு
    சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண் சைபர் கிரைம்
    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025