NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது
    கட்டடங்களை இடிக்கும் பணியால், காஷ்மீரின் நிலை பாலஸ்தீனத்தை விட மோசமாகி வருகிறது: மெகபூபா முப்தி

    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023
    03:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் "ஆக்கிரமிப்புகளை அகற்றும்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று(பிப் 8) நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்றார்.

    அந்த பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்தனர்.

    ஏராளமான கட்சித் தொண்டர்களுடன், ரயில்வே பவனில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல முப்தி திட்டமிட்டிருந்தார். அங்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் "புல்டோசர் கொள்கை" பற்றி எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க அவர் விரும்பினார்.

    முப்தியைப் போலீஸார் கைது செய்து, அவரையும் அவரது கட்சித் தொண்டர்களையும் ஜந்தர் மந்தருக்கு அழைத்துச் சென்றனர்.

    ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் கலைந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர்

    "புல்டோசர் கொள்கை" என்று எதை குறிப்பிடப்படுகிறார்?

    ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்று கூறப்படும் கட்டிடங்களை புல்டோசர் வைத்து அரசு அண்மையில் இடித்தது.

    அரசு நிலங்களை மீட்பதற்காக 20 மாவட்டங்களில் இந்த இடிப்பு பணி நடைபெற்று வந்தது.

    இதனால் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதை எதிர்த்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ரோஷினி சட்டம் சட்டம் 2007இல் ஜம்மு காஷ்மீரில் நடைமுறைக்கு வந்தது.

    இந்த சட்டத்தின் படி அரசாங்க நிலங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அவர்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று கருதப்படும்.

    ஆனால், 2020இல் இந்த சட்டத்தை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, தற்போது "அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கான" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவே இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்திற்கான காரணமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஜம்மு காஷ்மீர்
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025