NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு
    வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ளது வெளியுறவு அமைச்சகம்

    பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2024
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் மண்ணில், இந்திய ஏஜெண்டுகள் இலக்கு வைத்து படுகொலைகளை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அவற்றை "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம்" என்று கூறியுள்ளது.

    வெளிநாட்டு மண்ணில் வாழும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் இந்த நடவடிக்கை இருப்பதாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள உளவுத்துறை செயல்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

    வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் முந்தைய அறிக்கையையும் அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

    அதில் அவர் மற்ற நாடுகளில் குறிவைக்கப்பட்ட கொலைகள் "இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல" என்று கூறியுள்ளார்.

    அறிக்கை

    தி கார்டியன் அறிக்கை என்ன கூறுகிறது?

    2019ஆம் ஆண்டு ஜம்முவில் நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில், 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டபிறகு, தேசிய பாதுகாப்பிற்கான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற 20 இலக்கு கொலைகளை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான RAW நடத்தியதாக சில பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் பகிர்ந்துள்ளதை ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பின்னர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

    ஆனால், 2023ஆம் ஆண்டு முதல், குறிவைக்கப்பட்ட படுகொலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தானின் உளவுத்துறையின் ஆதாரங்கள், சுமார் 15 பேரின் சந்தேக மரணங்களில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

    அவர்களில் பெரும்பாலோர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் நெருங்கிய தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது.

    இந்திய ஏஜென்ட்ஸ்

    பாகிஸ்தான் கூறுவது என்ன?

    பாகிஸ்தான் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த மரணங்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செயல்படும் இந்திய உளவுத்துறை ஸ்லீப்பர் செல்களால் திட்டமிடப்பட்டது.

    ஜூன் 18, 2023 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, கனடாவின் சமீபத்திய கூற்றுகளால் இந்த அறிக்கை ஆதரிக்கப்பட்டது.

    இந்திய உளவுத்துறை செயலாளரை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு மண்ணில் நீதிக்கு புறம்பான கொலைகளுடன் தொடர்புடைய இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி போன்ற புலனாய்வு அமைப்புகளிலிருந்து இந்தியா உத்வேகம் பெற்றுள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

    2018ஆம் ஆண்டு சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதை RAW அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெளியுறவுத்துறை
    பாகிஸ்தான்
    கொலை
    இந்தியா

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    வெளியுறவுத்துறை

    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் சீனா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா

    பாகிஸ்தான்

    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதம்
    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் காசா
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? இந்தியா
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா

    கொலை

    பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது  கர்நாடகா
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? அமெரிக்கா
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு  கேரளா

    இந்தியா

    "டெஸ்ட் மேட்ச் இருப்பதால் நீ திரும்பிச் செல்ல வேண்டும்": அஸ்வினின் தாயார்  அஸ்வின் ரவிச்சந்திரன்
    தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது? பண்டிகை
    கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல்  கனடா
    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  அருணாச்சல பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025