NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 26, 2024
    09:55 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மன்மோகன் சிங் ஏற்கனவே சமீப காலங்களில் உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    92 வயதான மன்மோகன் சிங், தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியில் 1932இல் பிறந்தார்.

    இந்தியாவின் சோசலிச காலக் கொள்கைகளின் பிடியை உடைத்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய சிற்பி என்று புகழப்படுகிறார்.

    எம்பி பதவி 

    எம்பி அனைத்து பதவிகளில் இருந்தும் ஓய்வு

    2014இல் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும், எம்பி பதவியில் நீடித்து வந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த தனது ராஜ்யசபா எம்பி பதவிக்கு பிறகு எந்த பதவியையும் ஏற்கவில்லை.

    மல்லிகார்ஜுன் கார்கே, மன்மோகன் சிங்கின் பங்களிப்புகளை பாராட்டி, நவீன இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டினார்.

    1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.

    சோசலிச காலக் கொள்கைகளிலிருந்து இந்தியாவை தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தினார்.

    1991 முதல் ராஜ்யசபா உறுப்பினரான டாக்டர் சிங், 2004இல் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிடிஐ எக்ஸ் தள பதிவு

    Former prime minister Manmohan Singh admitted to emergency dept of AIIMS Delhi: Sources. pic.twitter.com/ZHcxS3RN2a

    — Press Trust of India (@PTI_News) December 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன்மோகன் சிங்
    எய்ம்ஸ்
    மருத்துவமனை
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மன்மோகன் சிங்

    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் நரேந்திர மோடி

    எய்ம்ஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  டெல்லி
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  மதுரை
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  டெல்லி

    மருத்துவமனை

    சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு; டெல்லி மருத்துவமனையில் அவசர அறுவைசிகிச்சை சத்குரு
    அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி தமிழக அரசு
    உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பாண்டிச்சேரி இளைஞர் பலியான விவகாரம்; பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்  உடல் எடை
    அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    இந்தியா

    2030க்குள் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களுக்கு ₹16,000 கோடி தேவை; ஃபிக்கி அறிக்கை மின்சார வாகனம்
    கூகுள் நிறுவனத்தின் இந்தியாவுக்கான புதிய தலைவராக ப்ரீத்தி லோபனா நியமனம் கூகுள்
    அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    இந்த ஆண்டு 18 ஓடிடி தளங்களை தடை செய்தது மத்திய அரசு; அமைச்சர் எல் முருகன் தகவல் ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025