NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

    தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2024
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சய் மகேஸ்வரி என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் செக்டார் 39 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார் 38A இல் உள்ள கிரேட் இந்தியா பிளேஸ்(ஜிஐபி) என்ற மாலில் உள்ள என்டர்டெயின்மென்ட் சிட்டி வாட்டர் பூங்காவிற்குச் சென்றிருந்தார்.

    லாக்கர்களில் தங்கள் உடைமைகளை வைத்த பிறகு, நண்பர்கள் அனைவரும் நேராக தண்ணீர் ஸ்லைடுக்குச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவராக சென்று சறுக்கத் தொடங்கினர், அப்போது மகேஸ்வரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    டெல்லி

    சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்து வருகிறது 

    "அவர் ஓய்வெடுக்க தரையில் அமர்ந்தார், ஆனால் அவரது உடல்நிலை மொத்தமாக சரியில்லை. அவர் ஜிஐபி மால் அதிகாரிகளின் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்" என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளனர்.

    சம்பவம் நடந்தவுடன் மகேஸ்வரியின் குடும்ப உறுப்பினர்களும் நொய்டாவுக்கு வந்து சேர்ந்தனர் என்றும், அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர்(நொய்டா) மணீஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு தான் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும்" என்று ஏடிசிபி மிஸ்ரா கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நொய்டா
    டெல்லி

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    நொய்டா

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உத்தரகாண்ட்
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் டெல்லி

    டெல்லி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  ஆம் ஆத்மி
    பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல் பாஜக
     மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவியை அறிவித்தது டெல்லி அரசு அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025