NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
    கலப்பட மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.

    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 30, 2023
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    கலப்பட மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் இந்த நடவடிக்கை குறித்த தகவலை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார். ஆனால் எந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

    "மருந்துகளின் தரத்தில் கலப்படம் செய்யும் அனைத்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாண்டவியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    சில இந்திய மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எந்தெந்த நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்தியா

    இந்திய மருந்துகளால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள்

    சில நாட்களுக்கு முன், 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது.

    மேலும், 26 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது, 76 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த சில மாதங்களாக இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரித்த கலப்பட மருந்துகளால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டன.

    கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர்.

    பிப்ரவரியில், சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் கண் சொட்டு மருந்துகளால் அமெரிக்காவில் குறைந்தது 55 பேர் பாதிக்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மன்சுக் மாண்டவியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    இந்தியா

    ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர் ஈரோடு
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை கொரோனா
    தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் இந்திய ராணுவம்

    மன்சுக் மாண்டவியா

    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் பட்ஜெட் 2023
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025