NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
    இந்தியா

    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி

    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
    எழுதியவர் Sindhuja SM
    Mar 30, 2023, 05:07 pm 0 நிமிட வாசிப்பு
    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
    கலப்பட மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.

    இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கலப்பட மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் இந்த நடவடிக்கை குறித்த தகவலை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார். ஆனால் எந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. "மருந்துகளின் தரத்தில் கலப்படம் செய்யும் அனைத்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாண்டவியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சில இந்திய மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்திய மருந்துகளால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள்

    சில நாட்களுக்கு முன், 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது. மேலும், 26 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 76 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரித்த கலப்பட மருந்துகளால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரியில், சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் கண் சொட்டு மருந்துகளால் அமெரிக்காவில் குறைந்தது 55 பேர் பாதிக்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    மத்திய அரசு
    மன்சுக் மாண்டவியா

    இந்தியா

    இந்தியாவில் BGMI சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்தன.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விளையாட்டு நிறுவனம்! கேம்ஸ்
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை டெல்லி
    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை

    மத்திய அரசு

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா

    மன்சுக் மாண்டவியா

    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி இந்தியா
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு இந்தியா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் இந்தியா
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023