NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
    முதல்வரின் பெயர் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக அறிவிக்கப்படும்

    தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 02, 2024
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரின் பெயர் மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக டிசம்பர் 4 புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று திங்களன்று மூத்த பாஜக நிர்வாகியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி, அதன் சட்டமன்ற கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அந்த நபர் மேலும் கூறியதாக செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

    பாஜக கட்சி திங்களன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரை அதன் மகாராஷ்டிர சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக நியமித்தது.

    அவர்கள் மேற்பார்வையில், எம்.எல்.ஏக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

    பதவியேற்பு

    10 நாட்களாக தலைமையை தீர்மானிக்க திணறும் மாநில கட்சி

    கட்சியின் மூத்த நிர்வாகி பிடிஐயிடம், "ரூபானியும், சீதாராமனும் மும்பையில் புதன்கிழமை (டிசம்பர் 4) பாஜகவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்திப்பார்கள். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த பார்வையாளர்கள் அடுத்த முதலமைச்சராக வரவிருக்கும் பாஜக தலைவரின் பெயரை அறிவிப்பார்கள்"

    மகாயுதி அரசின் பதவியேற்பு விழா டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்த விஷயத்தில் இதுவரைஅதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் அனுப்பப்படவில்லை என்றாலும், மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

    ஆதரவு

    முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவை தெரிவித்துள்ளார்

    இதற்கிடையில், காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மேலிடத்திற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    என்ன முடிவெடுத்தாலும் அவரும் தனது கட்சியும் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

    முதல்வர் பதவிக்கு பாஜகவிற்கு தடையாக இருக்க மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    பாஜகவுடனான மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய இரு கட்சிகளும் புதிய அரசாங்கத்தில் துணை முதல்வர் பதவியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக வந்த வதந்திகளை நிராகரித்த ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த், "அதிகாரத்தில் பதவிக்கு ஆசைப்படவில்லை" என்று தெளிவிவுபடுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    பாஜக
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் நிதின் கட்காரி
    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது  காவல்துறை
    போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை விபத்து
    புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி விபத்து

    பாஜக

    பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்  இந்தியா
    பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்  பிரதமர் மோடி
    பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்; அமைச்சரவையில் இணைந்தார் ஜேபி நட்டா ஜே.பி.நட்டா
    அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு இந்தியா

    நரேந்திர மோடி

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்
    சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?! ஆந்திரா
    அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி ஆனந்த் அம்பானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025