NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
    'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

    பச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 12, 2025
    07:55 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான "கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்", இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    பச்சை பட்டுடன் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகரை, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் வரவேற்றனர்.

    மே 10ஆம் தேதி அழகர்கோயிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு, நேற்று அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது.

    இன்று கருப்பணசுவாமி கோயிலில் இருந்து பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்பட்டார்.

    வழியிலெல்லாம் பக்தர்கள் தண்ணீர் பீச்சியும், சர்க்கரை தீபங்களும் ஏற்றி அவரைத் தரிசித்தனர்.

    நாளைய நிகழ்வுகள்

    மதுரையில் நாளைய நிகழ்வுகள்

    வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் வரவேற்றார்.

    நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    நாளை, மே 13ஆம் தேதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்பட்டு, கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிப்பார்.

    பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும்.

    பிற்பகலில், ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் முழக்கத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

    கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.#SunNews | #Kallazhagar | #ChithiraiThiruvizha pic.twitter.com/gGx8haNGWQ

    — Sun News (@sunnewstamil) May 12, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    சித்திரை திருவிழா

    சமீபத்திய

    பச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர் மதுரை
    கோடை வெயிலை சமாளிக்க சோடா, எனர்ஜி ட்ரிங்க் அடிக்கடி குடிப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை ஆரோக்கியமான உணவுகள்
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மதுரை

    மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை சுங்கச்சாவடி
    மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (செப்.6) முதல் 11 நாட்கள் புத்தகத் திருவிழா புத்தக கண்காட்சி
    மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது விமான நிலையம் விமான நிலையம்
    வாட்டி வதைத்த வெயில்; நாட்டிலேயே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு தமிழகம்

    சித்திரை திருவிழா

    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு  மதுரை
    மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு  மதுரை
    சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்! திருப்பூர்
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025