NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
    சென்னை உயர் நீதிமன்றம்

    மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2024
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    பொது மக்களின் நிலத்தின் வழியாக செல்லும் தனியார் நிறுவனங்கள் நிறுவிய உயரமின்னழுத்த கேபிள்களை மாற்றியமைக்க, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புறம்போக்கு நிலம் பக்கத்தில் இருந்தும் கூட, தங்கள் நிலம் வழியாக தனியார் நிறுவனங்கள் மின்கோபுர வழித்தடங்களை அமைத்துள்ளதாக நில உரிமையாளர்கள் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் தனியார் நிலத்தின் வழியாக மின் கேபிள்கள் அமைக்கப்பட்ட பொது ஆட்சேபம் தெரிவித்ததையும் மீறி உயரமின்னழுத்த கேபிள்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும், அவற்றை அகற்ற வேண்டுமென்றால் நிறுவனத்திற்கு 81.11 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கேட்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.

    தீர்ப்பு

    உயர் நீதிமன்ற தீர்ப்பு

    இரு பக்கத்தின் வாதத்தை கேட்ட நீதிபதி, "தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க, மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பொதுநோக்கத்துக்காக கிடையாது, தனியார் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே. இந்த வழித்தடங்கள் அமைக்கப்படும்போது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாமல் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது" என்றார்.

    அதோடு, பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவதே, அரசு அதிகாரிகளின் கடமையே தவிர, தனியார் நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவது கிடையாது. மாற்றுப்பாதை இருக்கும்போது, மனுதாரர்களின் நிலம் வழியாக அமைத்திருக்கிறார்கள். கோர்ட் இதனை ஏற்காது' என்றார்.

    "மனுதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்களின் நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மின்கோபுர வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும். தனிநபர்கள் மீது செலவு தொகையை சுமத்தக்கூடாது. இன்னும் 8 வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்கவேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    சென்னை உயர் நீதிமன்றம்

    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்  சிபிஐ
    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி  அதிமுக
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  சென்னை
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து உயர்நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025