
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தனியார் வானிலையார் தமிழ்நாடு வெதர்மன் (Tamilnadu Weatherman) வெளியிட்டுள்ள பதிவில், "நவம்பர் 12-17 வரை மழையின் தீவிர நிலை, இதில் KTCC (சென்னை) நவம்பர் 12-16 வரை இடைவேளையுடன் தினசரி மழையைப் பெறும்" எனக்கூறியுள்ளார்.
அதோடு, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இன்று இரவு / நாளை காலை முதல் 5-வது பருவமழை தொடங்கும். நாளை, நவம்பர் 12ஆம் தேதி KTCC (சென்னை மற்றும் அண்டை மாவட்டங்கள்) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Active phase of Rains from 12-17 November of which KTCC (Chennai) will get rains on daily basis with breaks from 12-16th November.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 11, 2024
The 5th spell of the monsoon will start from tonight / tomorrow morning with low pressure in southwest Bay of Bengal.
Heavy rainfall on 12th - KTCC… pic.twitter.com/djQjQ7NVbf
மழை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை
முன்னதாக, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது அதே இடத்தில் நிலவுவதாக கூறப்பட்டது.
அதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வரவிருக்கும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மற்ற சில மாவட்டங்களில் நவம்பர் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.